தேசிய திட்டமிடல் திணைக்களம்,  ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து சகல அமைச்சுக்கள் மற்றும் மாகாணசபைகள் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டமிடல்களில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான 'மூலோபாயக் கருத்திட்டத் தயாரித்தல்' எனும் தலைப்பில் முழுநாள் பயிற்சிப்பட்டறையொன்றினை 3 குழுக்களாகப் பிரித்து 2018 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14, 21 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடாத்தியது. இப்பயிற்சிப்பட்டறையின் நோக்கங்களாக முன்மொழியப்பட்ட திருத்திய கருத்திட்டச் சமர்ப்பிப்பு வடிவத்தினை அறிமுகம் செய்வதுடன் மேலும் அலுவலர்களின் மூலோபாயக் கருத்திட்டத் தயாரிப்பிலும் மதிப்பீட்டிலும் ஈடுபடும் தன்மையை செயல்முறை அமர்வுகளின் மூலம் அதிகரிக்கச் செய்வதுமாக இருந்தன. இதற்கு மொத்தமாக 170 அ​லுவலர்கள், 41 நிரல் அமைச்சுக்களிருந்தும் 9 மாகாணசபைகளிருந்தும் பங்குபற்றினர்.  பயிற்சிப்பட்டறையானது திட்டமிடலுடன் தொடர்புடைய கலைச்சொற்களைக் கொண்ட தத்துவ ரீதியிலான அமர்வினையும் கொடுக்கப்பட்ட விடய ஆய்வுகளை உபயோகித்து பிரதான கருத்திட்டக் கூறுகளை இனங்காணும் செயல்முறை அமர்வினையும் கொண்டிருந்தது. பயிற்சிப்பட்டறையானது விரிவான கருத்திட்ட முன்மொழிவினைத் தயாரிப்பதற்கான அனுபவத்தினையும் பரந்த அறிவினையும் வழங்கி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.